Thursday, August 20, 2009

உண்மைத் தமிழனுக்கு ஒரு கடிதம் !

அன்பு தம்பி உண்மை தமிழனுக்கு,
தங்களுடைய " மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை இவர்களுக்கு மட்டும் இல்லையா ..... " எனற தலைப்பிட்ட பதிவிற்கான http://truetamilans.blogspot.com/ எனது விளக்கம் பதிவாக தரப்படுகிறது. தங்கள் பிளாக்கிலேயே பின்னூட்டம் இடலாம் என்று நினைத்தேன். பின்னூட்டம், பதிவு அளவிற்கு இருப்பதால் பதிவாகவே போட்டுள்ளேன்.

தங்களின் தலைப்பு, அரசியல்வாதிகளைத் தவிர மற்றவர்களுக்கு சூடு ....... இத்தியாதி இருப்பது போல, பொருள் தருகிறது. இந்த விஷயத்தில் அரசியல் வாதிகள் ( மன்னிக்கவும் - என்னால் மக்கள் பிரதிநிகள் என்று இவர்களை சொல்ல முடியவில்லை) மற்றும் வாக்காள அறிவு கொழுந்துகளுமாகிய நாமும் தான் சம்பந்தப்பட்டவர்கள். அப்படியென்றால் நமக்கெல்லாம் சூடு, சொரணை எல்லாம் இருக்குதுன்னு சொல்லுறீங்களா?

ஆமாம் என்றால் இதுதான் உலகிலேயே முதன்மையான ஜோக் ஆக இருக்க முடியும் !

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1967 ல் மாற்று அரசு அமையும் வரை, தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. ஒப்பிட்டு பார்த்து எது நல்ல கட்சி, எது நல்லது செய்யும் என முடிவு செய்ய முடியாததால், ஒரு மாற்றாக திராவிட கழகத்தினருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தோம். என்ன நடந்தது? 1947 லிருந்து 1967 வரை ஏறு முகமாக இருந்த தமிழ்நாட்டின் வளர்ச்சி, படிப்படியாக இறங்கு முகமானது.

அதன் பின்பாவது நீங்கள் சொல்லும் " சூடு, சொரணை நமக்கிருந்திருந்தால், மாற்று கட்சியினரை ஆட்சி செய்ய வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். நமக்கு ஏழரை நாட்டு சனியன் பிடித்ததால், அறிவு வேலை செய்யவில்லை. அதனால் சேவை செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணங்களுடன் அரசியலில் இருந்தவர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். புதிதாக நல்லவர்கள் யாரும் அரசியலுக்கு வர விரும்பவில்லை!.

அதன் விளைவு, அரசியல் வியாபாரமானது. வியாபாரம் என்று வந்துவிட்ட பின்பு பனம் இருப்பவன் எவன் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் இல்லையா?. நல்லவர்களை தவிர எல்லோரும் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். ஜாதிக்கட்சிகள், மத கட்சிகள் என்று ஏராளமான கட்சிகள் தோன்றி விட்டது. அரசியல் சாக்கடையாக ஆகி விட்டது!

அய்யோ ! சாக்கடை நாறுகிறதே. சாக்கடை நாறலாமா? என்று ஆதங்கப்படுகி றீர்கள்!. சாக்கடை நாறாமல் மணக்கவா செய்யும்?

ஒரு பிரபல் கட்சியை சார்ந்தவர், மந்திரியாக இருக்கும் பொழுது பத்தாயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது என்று ஊடகங்கள் எல்லாம் கிழி கிழி என்று கிழித்தன. அது உண்மைதான் என C.A.G என அழைக்கப்படும் " Comptroller & Auditor General of India" -வே உறுதி செய்த பின்பும், அவரை மறுபடியும் நாம் தேர்ந்தெடுத்து, அதே துறையில் அமைச்சராக்கியுள்ளோம்! இந்த தவறுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்!

சக்கடை நாறத்தான் செய்யும் அதை மாற்றாத வ்ரை. எப்படி மாற்றுவது என்று விவாதிப்போம். ஒன்றுபட்டு செயல் படுவோம்.

" மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை நமக்கு இல்லையா ..... " என்று பதிவின் தலைப்பு இருக்குமானால் பொறுத்தமாக இருக்கும்.
இந்த பதிவுக்கு காரணமாயிருந்த தங்களுக்கு நன்றி!

அன்புடன்
உண்மையான உண்மை.
http://invisibleman.blogspot.com/

No comments: