Tuesday, September 15, 2009

ஒரு கடிதம்.

மத்திய சட்ட அமைச்சர் திரு. வீரப்ப மொய்லி அவர்களுக்கு வணக்கம்.

2011 -ம் ஆண்டு எடுக்கவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதி வாரி யாக நடத்தவேண்டும் என சோனியா காந்தியின் பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களுக்கு நீங்கள் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வந்து ள்ளது.

எததனை மணிக்கு குளிக்கவேண்டும், எப்பொழுது தலைப்பாகை கட்ட வேண்டும் என்ற விஷயத்திலிருந்து, பாராளுமன்றத்தில என்ன பேசவேண்டும் என்பது வரை தங்களுடைய தலைவி திருமதி சோனியாவை கேட்டு, அவர் சொல்படி செயல் படும் மன்மோகன் சிங் அவர்கள், உங்கள் கடிதத்தையும் அவரிடம் தான் கொண்டு போவார். அவருக்கு இந்த சிரமத்தை கொடுக்காமல் நீங்களே தலைவிக்கு அனுப் பியிருந்தால் அது சிக்கன நடவடிக்கையாக இருந்திருக்கும் ! சிக்கன நடவடிக்கை என்பது பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்பும் ஒரு ஸ்டண்ட் தானே ! விட்டு தள்ளுங்கள்.

கர்நாடகாவில் நீங்கள் முதல் மந்திரியாக இருந்த பொழுது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லீம்கள் பற்றிய கணக்கெடுப்பு எடுத்து, அவர்களுக்கான நலத்திட்டங்களை கொடுத்ததாக கூறியுள்ளீர்கள். அங்கு ஒன்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லீம்கள் ஓகோ என்று பசி பட்டினியின்றி செழிப்பாக இல்லையே? ஒருவேளை அரசியல்வாதிகளாக இருப்பவர்களுக்கான திட்டத்தை தவறாக பொதுமக்களுக்கு என நினைத்துவிட்டேனா? ஒன்றும் புரியவில்லை.

சரி. இப்படி ஒரு கணக்கெடுத்து என்னத்தை சாதிக்கமுடியும் என நினைக்கிறீர் கள்? சலுகைகளை அறிவிக்கலாம்! நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் போல. அதை அமுல்படுத்தப்போவது மாநில அரசுகள் தான். வழ்க்கம் போல, சேர வேண் டியவர்களுக்கு கிடைக்க போவதில்லை. அந்த பிரிவில் மிகவும் வசதியாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் போன்ஸ் ஆக இது கிடைக்கப்போகிறது.

இந்த சலுகைகள் மூலம் மற்றவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டு கொஞச நஞசம் ஒட்டிக்கொண்டிருக்கும் ஜாதி மத நல்லுறவுகள் அறுந்து போகும். அதைப்பற்றி நாம் ஏன் கவைப்படவேண்டும்?

"ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" நாட்டில் ஜாதி கலவரங்கள், மத கலவரங்கள் என ஆளாளுக்கு அடித்துக்கொண்டால்தானே நமக்கு நல்லது.
அவர்கள் கவனம் முழுவதும் அதிலிருக்கும் பொழுது, நாம் எப்படி ஆட்சி செய்கிறோம் என்பதை பற்றி தெரிந்து கொள்ள நேரம் இருக்காது! அதனால் தானே எல்ல அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக " சலுகை" என்ற புலிவாலை பிடித்திருக்கிறீர்கள்.

எப்படியோ, நல்லாயிருங்கள். காந்தி, நேரு, லால்பகதுர் சாஸ்திரி, காமராஜர், கக்கன் போன்ற, நாட்டின் நலனுக்காக பாடுபட்ட தன்னலமற்ற தேசிய தலைவர்கள் இப்பொழுது யாரும் இல்லை. அவர்களின் காங்கிரஸ் கட்சியும் இன்று இல்லை.

தேர்தல் முறை கேடுகள் காரணமாக தனது தேர்தல் வெற்றி செல்லாது என,1975 -ம் ஆண்டு ஜூன் மாதம் 12 ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுத்து, ஜனநாயகததை குழிதோண்டி புதைத்து, " அவசர கால நிலையை பிரகடனம் செய்தார் திருமதி இந்திரா காந்தி. இதை எதிர்த்த தேசிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சர்வாதிகார போக்கால் காங்கிரசை பிளவு படுத்தி இந்திரா காங்கிரஸை உருவாக்கினார். காலப்போக்கில் இந்திரா காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரஸ் என பெயர் மாற்றம் அடைந்தாலும் அது உண்மையான காங்கிரஸ் இல்லை. சுய லாபத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சியிடம் தேசிய நலன் பற்றி பேசுவதில் எவ்வித பலனும் இல்லை.

தேசிய நலனில் அக்கறை கொண்டு, ஊழலற்ற ஆட்சியை தரக்கூடிய கட்சி எதுவுமே இல்லாததால்தான் 50 சதவிகிதத்தினர் தேர்தலில் வாக்களிப்பதே இல்லை. இதுதான் உண்மை. என்றைக்கு இவர்களுக்கு ஒரு வேகம் வருகிறதோ அன்று தான் இந்தியாவில் உண்மையான ஜனநாயகத்தை பாக்க முடியும். அது வரை " எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம்" என்ற பழமொழிக்கேற்ப நாட்டை குட்டிச்சுவராக்கட்டும் ! வாழ்க இந்திய இன்றைய ஜனநாயகம் ! பாவம் மகாத்மா காந்தி!



Wednesday, September 2, 2009

சமூக நீதி காவலர்கள் ஏன் தூங்குகிறார்கள்.

பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்குவதைத் தடுப்பது எப்படி? ஆராய உயர் நீதிமன்றம் உத்தரவு

First Published : 02 Sep 2009 02:28:52 AM IST


சென்னை, செப். 1: பாதாள சாக்கடையில் அடைப்புகளை அகற்ற மனிதர்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது எப்படி என்று ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாள சாக்கடைகளில் மனிதர் களை இறக்கி அடைப்புகளை அகற்றும் போது பல்வேறு சம்பவங்களில் உயிர் இழப்புகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து, அடைப்புகளை அகற்றுவதற்கு இயந்தி ரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மனிதர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குப் பிறகும், பாதாள சாக் கடைகளில் மனிதர்கள் தொடர்ந்து இறக்கப்படுவதாகக் கூறி நீதிமன்ற அவமதி ப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி எப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா, நீதிபதி பி.ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பாதாள சாக்கடைகள் குறித்து ஆராய, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். இந்தக் குழுவினர், பாதாள சாக்கடையில் திடக் கழிவுகள் கொட்டுவதைத் தடுப்பது மற்றும் அவற்றில் ஏற்படும் அடைப்பு களை அகற்றத் தேவையான கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக, பாதாள சாக்கடை களில் மனிதர்கள் இறங்குவதை எப்படி தடுப்பது என்பது குறித்து ஆராய்ந்து 2 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

நமது கேள்வி!


தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறும் அரசு ஏன் இது வரை இந்த விஷயத்தில் அக்கறை காட்டவில்லை? இந்த வேலையை செய்பவர்கள் உயர் ஜாதிக்காரர்கள் இல்லையே!

பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்கி வேலை செய்யும் பொழுது மூச்சு திணறி இறந்து விடும் நிகழ்ச்சிகள் நடப்பதால், மாற்று நடவடிக்கை கோரி ஏன் அரசியல் அல்லது தொழிலாளர் கட்சிகள்/ சங்கங்கள் போராடவில்லை?

இந்த பிரச்சனையினால் எவ்வித அரசியல் ஆதாயமும் பெற முடியாது என்பதாலா?

நீதி மன்ற உத்தரவிற்கு பின்பாவது விடிவு பிறக்குமா என்று பார்ப்போம்!

Tuesday, September 1, 2009

கருப்பு பணம் - இந்தியா திரும்புமா?


நாடகமாடும் மத்திய அரசு !

கறுப்புப் பண விவகாரம்: டிசம்பரில் இந்தியா-ஸ்விட்சர்லாந்து பேச்சு
First Published : 01 Sep 2009 12:19:09 AM IST


புது தில்லி, ஆக. 31: ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஸ்விட்சர்லாந்துடன் இந்தியா பேச்சு நடத்த உள்ளது. இரு நாடுகளிடையிலான பேச்சு வார்த்தை இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறும் என தெரிகிறது.

கறுப்புப் பண முதலைகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புகலிடமாக இருப்பது ஸ்விட்சர்லாந்துதான். அங்குள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர் பற்றிய விவரம் தெரிவிக்க வேண்டிய அவசியமேயில்லை. இதனாலேயே உலகில் பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த கறுப்புப் பண பதுக்கல்காரர்களின் சொர்க்க புரியாக ஸ்விட்சர்லாந்து வங்கிகள் திகழ்கின்றன. சர்வதேச பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடும், தங்களது நாட்டைச் சேர்ந்த வர்கள் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள தொகையை தங்கள் சொந்த நாட்டுக்கு மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அமெரிக்கா விடுத்த கோரிக்கையின்படி அந்நாட்டைச் சேர்ந்தவர்களின் பட்டியலைத் தர ஸ்விட்சர்லாந்து முன்வந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், ஆயுத தரகர்கள் ஆகியோர் ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இதனிடையே கறுப்புப் பணத்தைத் தேடி ஸ்விட்சர்லாந்துக்கு வர வேண்டாம் என கடந்த வாரம் அந்நாட்டு வங்கிகள் தெரிவித்துள்ளன. இத்தகைய சூழலில் இந்திய நிதித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக முதல் சுற்று பேச்சு வார்த்தையை தொடங்கஉள்ளனர்.

பொருளாதார மேம்பாட்டுக்கு கூட்டாக செயல்படுவதற்காக ஸ்விட்சர்லாந்துடன் போடப்பட்ட இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு முறை ஒப்பந்த அடிப்படையில் கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பேச்சு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு சந்தேகம்!

இத்தாலிய தொழில் அதிபர் கொட்டரோச்சியை காப்பாற்றுவதற்காக, இண்டர்போலால் வெளி நாட்டு பயனத்தின் போது கைதுசெய்யப்பட்ட அவர் மீது, இந்தியாவில் வழக்கு எதுவும் கிடையாது என அங்கு சென்று பொய் சொல்லி விடுவித்தது, வெளியுறவுத்துறை மற்றும் சி.பி.ஐ. இந்நிலையில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பெயரில் சுவிச்சர்லாந்தில் கருப்பு பண கணக்கு உண்டு என ஆதாரத்துடன் வெளியான தகவலை அடுத்து சுப்பிரமணிய சாமியால் உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்குக்கே, ஆரசு நடவடிக்கை எடுக்கவில்லை. விபரத்திற்கு கிழ்கண்ட வெப் சைட்டுக்கு சென்று பார்க்கவும்.

http://vivekajyoti.blogspot.com/2009/05/swiss-authorities-in-1991-came-to-know.html

இந்நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுப்போம் என கூறுவது ஏமாற்று வேலை தான் !.


Monday, August 31, 2009

காமெடிசெய்யும் முதலமைச்சர்!.

விகடன்.காம் -லிருந்து இப்பொழுது ஒரு மெயில் வந்தது. அதவது நான் விகடன் .காம் - ல் ஸப்கிரைப் ( Subscribe) செய்திருக்கிறேன். புதிய செய்திகளை அவர்கள் பிரசுரிக்கும் பொழுது தனது ஸ்ப்கிரைப்பர்களுக்கு இ மெயில் மூலம் அது பற்றி தெரிவிப்பார்கள். மெயிலை திறந்து பார்த்தால், " இலவச திட்டங்கள் தொடரும்: முதலமைச்சர் கருணாநிதி அறிவிப்பு." என செய்தி இருந்தது.

சென்னை, ஆக.31-: அரசின் இலவச திட்டங்கள் தொடரும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- தி.மு.கழக அரசின் இலவசத் திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்கள் என்பதைத் தாண்டி வாக்கு வங்கி அரசியலுக்காக எல்லை தாண்டிப் போவதாக ஒரு ஆங்கில இதழ் கட்டுரை தீட்டியிருக்கிறதே?

பதில்:- ஒரு பொருள் பற்றி வாதம் செய்வோர் உண்டு. எதிர் வாதம் செய்வோரும் இருப்பர். இவர்களை அன்னியில் மூன்றாவது அணியினர் ஒருபுறம் இருப்பார்கள். அவர்கள் தான் "குதர்க்க வாதம்" செய்வோர். அப்படிப்பட்ட ஒருவர் தான் தமிழக அரசின் இலவசத் திட்டங்களைப் பற்றி குறை கூறி அந்தக் கட்டுரையைத் தீட்டியிருக்கிறார் என்று கருதுகிறேன்.

அந்தக் கட்டுரையாளர் தன் வாதத்திற்கு ஆதரவாக சீனப் பழமொழி ஒன்றைத் துணைக்கு அழைத்திருக்கிறார். "பசி என்று வருபவனுக்கு மீனைக் கொடுக்காதே; மீன் பிடிக்கக் கற்றுக் கொடு" என்று எழுதியிருக்கிறார்.

அதாவது ஒருவன் பசி உயிர் போகிறதே என்று அவரிடம் கேட்டால், உடனடியாக அவனுக்கு ஒரு ரொட்டித் துண்டு வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக அவன் பசியில்லாமல் வாழ பாடம் நடத்தி எப்படியெல்லாம் மீன் பிடிக்க வேண்டும் தெரியுமா என்றெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டுமாம். அவன் அதைக் கற்றுக்கொள்வதற்குள் அவன் உயிரே போய் விடும்.

அய்யன் வள்ளுவர்; திருக்குறளில் "காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" அதாவது தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

ஒருவருக்கு செய்கின்ற உதவி உரிய காலத்தில் செய்யப்பட வேண்டும். மாறாக உன்னை நீயாகவே சம்பாதிக்க வைக்கிறேன், நீ இலவசமாக எதையும் பெறக் கூடாது என்றெல்லாம் கூறினால், அவன் அதற்குத் தயாராவதற்குள் போய்ச் சேர்ந்து விடுவான்.

இலவசத் திட்டங்களுக்காக செலவிடப்படும் தொகைகளையெல்லாம் குறிப்பிட்டு ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்திற்காக 150 கோடி- கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறு கால உதவி 250 கோடி என்றெல்லாம் கட்டுரை ஆசிரியர் பட்டியல் இட்டுள்ளார்.

இத்தகைய உதவிகளைப் பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளவர்கள் இருக்கும் வரை இத்தகைய உதவிகளைச் செய்து தான் ஆக வேண்டும். ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் முன்னேற்றம் அடைய செய்து விட்டோ மென்றால், அதன் பிறகு இலவசத் திட்டங்களை நிறுத்தி விடலாம்.

ஆனால் மக்கள் அந்த அளவிற்கு வாழ்க்கையிலே முன்னேறுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை இத்தகைய உதவிகள் அளிக்கப்பட்டாக வேண்டுமென்பதுதான் கழக அரசின் குறிக்கோள். கட்டுரை ஆசிரியர் தமிழக அரசின் ஒட்டுமொத்த பற்றாக்குறை பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாகவும், அப்படியிருக்கும் போது இலவசத் திட்டங்கள் தேவை தானா என்றும் வருத்தப்படுகிறார்.

இலவசத் திட்டங்களை வழங்காத மாநில அரசுகளில் பற்றாக்குறையே கிடையாதா? அப்படி எந்த மாநிலம் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது? அது மாத்திரமல்ல. தமிழக அரசு தனது மொத்த பட்ஜெட்டையும் இலவசத் திட்டங்களுக்குச் செலவு செய்யவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காகவும், மக்கள் வாழ்க்கையிலே முன்னேற வேண்டும் என்பதற்காகவும் எத்தனையோ கோடிகள் நிதி ஒதுக்கியிருப்பதையெல்லாம் மறந்து விடக்கூடாது.

உதாரணமாக 2009-2010 ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வேளாண்மைத் துறை, கால் நடைத் துறை, பால்வளத் துறை, மீன்வளத் துறை, கூட்டுறவுத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை போன்ற துறைகளில் விவசாய வளர்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள மொத்த நிதி ஒதுக்கீடு மட்டும் 5,236 கோடி ரூபாயாகும். 2005-2006ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் காவல் துறைக்காகச் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 1,346 கோடி ரூபாய்.

அதனை இந்த ஆண்டு 2,855 கோடி ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம் என்றால், அந்தத் தொகை இலவசத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையா என்பதை கட்டுரை ஆசிரியர் தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.

நீர் வள நில வளத்திட்டத்திற்காக 533 கோடி ரூபாயும், நீதித்துறைக்காக 378 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்காக மட்டும் 9,147 கோடி ரூபாயும் உயர் கல்வித் துறைக்காக 1,463 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றால் அதெல்லாம் இலவசத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்று அந்த இதழில் கட்டுரை எழுதியிருப்பவர் எண்ணுகிறாரா?

எனவே இந்த அரசைப் பொறுத்தவரையில் ஏழைகள் ஓரளவிற்கு சமுதாய அந்தஸ்து பெறுகின்ற வரையில் இலவசத் திட்டங்கள் என்பது இன்றியமையாதது என்பது அனுபவ பூர்வமான உண்மையாகும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

நமக்கு இதை படித்தவுடன் தோன்றும் சில சந்தேகங்கள்!. யார் பதிலளிப்பார்கள்?

அரசாங்கம் என்பது தனிநபர் அல்லது தனியார் நிறுவனம் இல்லை. தமிழ் நாட்டு மக்களால், தங்களுடைய பொதுவான அடிப்படை தேவைகளை செய்ய அமைக்கப்பட்ட அமைப்பு. அது முற்றிலும் மக்களால் கொடுக்கப் படும்பணத்தை கொண்டு இயங்குவது. பச்சையாக சொல்வதாக இருந்தால், ஒரு வேலைக்கார அமைப்பு!. ஒரு வேலைக்காரன், தன்னுடைய எஜமானர்களுக்கு அவர்கள் பணத்தில் செய்வதை எப்படி இலவசம் என்று சொல்ல முடியும் ?. முதலமைச்சர் தனது அல்லது தன் அமைச்சர்கள் அல்லது தனது கட்சியிலிருந்து, இத்திட்டங்களுக்கு ஆகும் செலவு செய்யப்படுமானால், இதை " இலவச திட்டம் " என கூற முடியும். எனவே இது வெறும் திட்டம் மட்டுமே!. இலவச திட்டம் கிடையாது.

2. வாக்கு வங்கி அரசியலுக்காக செய்யப்படுகிறது என்பதை மறுத்துள்ளார். அவர் வைக்கும் வாதம் காமெடியாக இருக்கிறது. இதற்கு வள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டியுள்ளது கொடுமை!. "காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" - இதற்கு நமக்கு தெரிந்த பொருள் " ஒருவன் இக்கட்டான நிலையில் இருக்கும் பொழுது அவனுக்கு உதவுவதுதான் சிறந்தது". டி.வி பார்ப்பது எனபது ஒருவனின் அத்தியாவசிய தேவையா? அல்லது இது இக்கட்டான சூழ்நிலையா? எதுவுமே இல்லாமல் நடுத்தெருவில் பிச்சை எடுக்கும் லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இருக்கும் இடமும் , உண்ன உணவும் கொடுத்து அத்துடன் அவன் பிழைப்புக்கும் வழி செய்தால் அது உதவி திட்டம். கீழ் மட்டத்தில் இருக்கும் இவர்களை கண்டு கொள்ளவே இல்லையே? இருக்க இடம், மின்சார வசதி, கேபிள் கனெக்ஷன் உள்ளவனிடம் ஏன் இந்த பரிவு? பிச்சைக்காரனுக்கு வோட்டு கிடையாது ! ஆனால் இவனுக்கு உண்டு. இதை ஓட்டு வங்கி திட்டம் என்று சொல்வதில் என்ன தவறு? குடிகாரனுக்கு இலவச் மதுத்திட்டம், இலவச சின்ன வீடு திட்டம் போன்றவற்றையும் " காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" எனக்கூறி அமுல் படுத்த போகிறாரா? பசியென்று வருபவனுக்கு முதலில் மீனைக்கொடு. அடுத்தநாள் மீன் பிடிக்க கற்றுக்கொடு! (சீன பழமொழி) அர்த்தம்: அவலத்தில் உள்ள ஒருவனுக்கு அதில் இருந்து மீள வழி சொல்லு. பிறரில் என்றும் தங்கி இருக்க வைத்து அவன் நிலையை நீயும் மேலும் அவலம் ஆக்காதே! . இதை புரிந்து கொண்டும் விதண்டா வாதத்திற்காக, "உடனடியாக அவனுக்கு ஒரு ரொட்டித் துண்டு வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக அவன் பசியில்லாமல் வாழ பாடம் நடத்தி எப்படியெல்லாம் மீன் பிடிக்க வேண்டும் தெரியுமா என்றெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டுமாம்" என கூறுகிறார்.

சரி. இன்று பிச்சைகாரர்கள் போல கையேந்தி நிற்கும் இவர்கள் நிலை மாற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.

கட்டுரை எழுதுபவர்கள் இந்த நாட்டு மக்களில் ஒருவர் என்பதையும் அதை வெளியிடும் பத்திரிகைகள் ஜனநாயகத்தின் ஒரு தூண் என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை முறையாக சொல்ல வேண்டிய கடமை பதவியிலிருப்பவர்களுக்கு உண்டு. காரணம் இப்பதவி மக்கள் வழங்கியது. பதவியிலிருந்து பெறும் வசதிகள் மக்கள் பணத்திலிருந்து கொடுக்கப்படு கிறது!.

Thursday, August 20, 2009

உண்மைத் தமிழனுக்கு ஒரு கடிதம் !

அன்பு தம்பி உண்மை தமிழனுக்கு,
தங்களுடைய " மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை இவர்களுக்கு மட்டும் இல்லையா ..... " எனற தலைப்பிட்ட பதிவிற்கான http://truetamilans.blogspot.com/ எனது விளக்கம் பதிவாக தரப்படுகிறது. தங்கள் பிளாக்கிலேயே பின்னூட்டம் இடலாம் என்று நினைத்தேன். பின்னூட்டம், பதிவு அளவிற்கு இருப்பதால் பதிவாகவே போட்டுள்ளேன்.

தங்களின் தலைப்பு, அரசியல்வாதிகளைத் தவிர மற்றவர்களுக்கு சூடு ....... இத்தியாதி இருப்பது போல, பொருள் தருகிறது. இந்த விஷயத்தில் அரசியல் வாதிகள் ( மன்னிக்கவும் - என்னால் மக்கள் பிரதிநிகள் என்று இவர்களை சொல்ல முடியவில்லை) மற்றும் வாக்காள அறிவு கொழுந்துகளுமாகிய நாமும் தான் சம்பந்தப்பட்டவர்கள். அப்படியென்றால் நமக்கெல்லாம் சூடு, சொரணை எல்லாம் இருக்குதுன்னு சொல்லுறீங்களா?

ஆமாம் என்றால் இதுதான் உலகிலேயே முதன்மையான ஜோக் ஆக இருக்க முடியும் !

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1967 ல் மாற்று அரசு அமையும் வரை, தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. ஒப்பிட்டு பார்த்து எது நல்ல கட்சி, எது நல்லது செய்யும் என முடிவு செய்ய முடியாததால், ஒரு மாற்றாக திராவிட கழகத்தினருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தோம். என்ன நடந்தது? 1947 லிருந்து 1967 வரை ஏறு முகமாக இருந்த தமிழ்நாட்டின் வளர்ச்சி, படிப்படியாக இறங்கு முகமானது.

அதன் பின்பாவது நீங்கள் சொல்லும் " சூடு, சொரணை நமக்கிருந்திருந்தால், மாற்று கட்சியினரை ஆட்சி செய்ய வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். நமக்கு ஏழரை நாட்டு சனியன் பிடித்ததால், அறிவு வேலை செய்யவில்லை. அதனால் சேவை செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணங்களுடன் அரசியலில் இருந்தவர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். புதிதாக நல்லவர்கள் யாரும் அரசியலுக்கு வர விரும்பவில்லை!.

அதன் விளைவு, அரசியல் வியாபாரமானது. வியாபாரம் என்று வந்துவிட்ட பின்பு பனம் இருப்பவன் எவன் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் இல்லையா?. நல்லவர்களை தவிர எல்லோரும் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். ஜாதிக்கட்சிகள், மத கட்சிகள் என்று ஏராளமான கட்சிகள் தோன்றி விட்டது. அரசியல் சாக்கடையாக ஆகி விட்டது!

அய்யோ ! சாக்கடை நாறுகிறதே. சாக்கடை நாறலாமா? என்று ஆதங்கப்படுகி றீர்கள்!. சாக்கடை நாறாமல் மணக்கவா செய்யும்?

ஒரு பிரபல் கட்சியை சார்ந்தவர், மந்திரியாக இருக்கும் பொழுது பத்தாயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது என்று ஊடகங்கள் எல்லாம் கிழி கிழி என்று கிழித்தன. அது உண்மைதான் என C.A.G என அழைக்கப்படும் " Comptroller & Auditor General of India" -வே உறுதி செய்த பின்பும், அவரை மறுபடியும் நாம் தேர்ந்தெடுத்து, அதே துறையில் அமைச்சராக்கியுள்ளோம்! இந்த தவறுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்!

சக்கடை நாறத்தான் செய்யும் அதை மாற்றாத வ்ரை. எப்படி மாற்றுவது என்று விவாதிப்போம். ஒன்றுபட்டு செயல் படுவோம்.

" மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை நமக்கு இல்லையா ..... " என்று பதிவின் தலைப்பு இருக்குமானால் பொறுத்தமாக இருக்கும்.
இந்த பதிவுக்கு காரணமாயிருந்த தங்களுக்கு நன்றி!

அன்புடன்
உண்மையான உண்மை.
http://invisibleman.blogspot.com/

Tuesday, August 18, 2009

கொலையின் பெயர் என்கவுண்டர் !













இதன் பெயர் தான் என்கவுண்டர்!

மணிப்பூர் மாநிலத்தின் தலை நகராகிய இம்பாலில், ஜூலை 23 ம் தேதி, ஜனத்திரள் அதிகமாக உள்ள இடத்தில் பார்மஸிக்கு வந்த 27 வயதான இந்திய பிரஜையான Chongkham Sanjit என்பவரை பார்மசிக்குள் வலுக்கட்டாயமாக த்ள்ளிட்டு போய் சுட்டு கொன்றுள்ளனர் MPC என அழைக்கப்படும் மணிப்பூர் ரேபிட் போர்ஸ் போலீஸ். இன்னொரு கர்ப்பினி பெண்ணும் இவர்களால் கொல்லப்பட்டு அவள் உடலும் வேனில் ஏற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். அதிர்ஷ்டவசமாக போலீஸுக்கு தெரியாமல் அங்கிருந்த ஒருவர் மொபைல் போன் காமிராவில் படம் எடுத்து விட்டார். இப்புகைப்படங்கள் பின் டெகல்கா பத்திரிகை மூலம் வெளியடப்பட்டு விஷயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. வாழ்க இந்திய ஜனநாயகம்!

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் !

தொழில் தொடங்குகள் !

* முதலீடு எதுவும் தேவை இல்லை!

* கல்வி தகுதி / அனுபவம் தேவையில்லை!

* நீங்க்ள் 21வயது பூர்த்தியடைந்தவராக இருந்தால் போதும்!

* இந்த தொழிலை நீங்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ செய்யலாம் !

* நீங்கள் வருமான வரி கணக்கு காட்ட வேண்டாம்!

* தொழில் வரி கிடையாது!

* உங்கள் தகுதியின் அடிப்படையில், மாநில அரசு அல்லது மத்திய அரசே உங்களுக்கு உதவித்தொகை வழங்குவதுடன் பல வசதிகளும் செய்து தரும்!

3 மாத கால இலவச பயிற்சி !

அணுக வேண்டிய முகவரி :

திரு. அப்பாவி தமிழன்
( தலைவர்)
தமிழ் நாடு வாக்காளர்கள் பின்னேற்ற சங்கம்.
252/ ADEF -32, நார்த் உஸ்மான் ரோடு,
தி. நகர், சென்னை.
P.H 9999 8888/ 89/90

கவனிக்க: எங்களுக்கு சென்னையை தவிர வேற் எங்கும் கிளைகள் இல்லை