கறுப்புப் பண விவகாரம்: டிசம்பரில் இந்தியா-ஸ்விட்சர்லாந்து பேச்சு
புது தில்லி, ஆக. 31: ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஸ்விட்சர்லாந்துடன் இந்தியா பேச்சு நடத்த உள்ளது. இரு நாடுகளிடையிலான பேச்சு வார்த்தை இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறும் என தெரிகிறது.
கறுப்புப் பண முதலைகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புகலிடமாக இருப்பது ஸ்விட்சர்லாந்துதான். அங்குள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர் பற்றிய விவரம் தெரிவிக்க வேண்டிய அவசியமேயில்லை. இதனாலேயே உலகில் பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த கறுப்புப் பண பதுக்கல்காரர்களின் சொர்க்க புரியாக ஸ்விட்சர்லாந்து வங்கிகள் திகழ்கின்றன. சர்வதேச பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடும், தங்களது நாட்டைச் சேர்ந்த வர்கள் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள தொகையை தங்கள் சொந்த நாட்டுக்கு மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அமெரிக்கா விடுத்த கோரிக்கையின்படி அந்நாட்டைச் சேர்ந்தவர்களின் பட்டியலைத் தர ஸ்விட்சர்லாந்து முன்வந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், ஆயுத தரகர்கள் ஆகியோர் ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இதனிடையே கறுப்புப் பணத்தைத் தேடி ஸ்விட்சர்லாந்துக்கு வர வேண்டாம் என கடந்த வாரம் அந்நாட்டு வங்கிகள் தெரிவித்துள்ளன. இத்தகைய சூழலில் இந்திய நிதித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக முதல் சுற்று பேச்சு வார்த்தையை தொடங்கஉள்ளனர்.
பொருளாதார மேம்பாட்டுக்கு கூட்டாக செயல்படுவதற்காக ஸ்விட்சர்லாந்துடன் போடப்பட்ட இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு முறை ஒப்பந்த அடிப்படையில் கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பேச்சு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு சந்தேகம்!
இத்தாலிய தொழில் அதிபர் கொட்டரோச்சியை காப்பாற்றுவதற்காக, இண்டர்போலால் வெளி நாட்டு பயனத்தின் போது கைதுசெய்யப்பட்ட அவர் மீது, இந்தியாவில் வழக்கு எதுவும் கிடையாது என அங்கு சென்று பொய் சொல்லி விடுவித்தது, வெளியுறவுத்துறை மற்றும் சி.பி.ஐ. இந்நிலையில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பெயரில் சுவிச்சர்லாந்தில் கருப்பு பண கணக்கு உண்டு என ஆதாரத்துடன் வெளியான தகவலை அடுத்து சுப்பிரமணிய சாமியால் உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்குக்கே, ஆரசு நடவடிக்கை எடுக்கவில்லை. விபரத்திற்கு கிழ்கண்ட வெப் சைட்டுக்கு சென்று பார்க்கவும்.
http://vivekajyoti.blogspot.com/2009/05/swiss-authorities-in-1991-came-to-know.html
இந்நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுப்போம் என கூறுவது ஏமாற்று வேலை தான் !.
3 comments:
But Subramaniyan Swamy is not a genuine guy....
regarding black money yes friend.. I agree ur concept....
புறம்போக்கு அரசியல் பணப் பேய்களின் கையிலிருந்து இந்தியாவை மீட்க இன்னும் எத்தனை காந்தியடிகள் தேவையோ?
சுமார் 110 கோடி மக்கள்.
40 கோடி குடும்பங்கள். ஆனால் சுமார் 10000 அரசியலாளர்களின் கருப்பு பணம் 70 லட்சம் கோடி . என்ன புரிகிறதா ? என்ன சொல்வது ?
Post a Comment